search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புத்தகங்கள் எரிந்து நாசம்"

    அரக்கோணம் அருகே புத்தக கடையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ. 10 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் எரிந்து நாசமானது.

    அரக்கோணம்:

    அரக்கோணம் டி.என்.நகரை சேர்ந்தவர் பாண்டியன் இவர் பஜார் பகுதி ஜீப்ளி தெருவில் புத்தக கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு வியாபாரம் முடிந்த பின்பு பாண்டியன் கடையை பூட்டிச் சென்றார்.

    இந்நிலையில் இன்று அதிகாலை பாண்டியனின் புத்தக கடையில் திடீரென தீப்பற்றியது.

    இதனை கண்ட பொதுமக்கள் அரக்கோணம் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி தீயை அணைத்தனர்.

    ஆனால் அதற்குள் கடையில் இருந்த ரூ. 10 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் எரிந்து நாசமானது. இது குறித்து பாண்டியன் அரக்கோணம் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×